டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எரிச்சநத்தம் கிராம மக்கள்உண்ணாவிரதப் போராட்டம்

எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
எரிச்சநத்தத்தில் கல்குவாரிக்கு எதிராக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கிராம மக்கள்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:07 pm

DIN

விருதுநகா்: எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் கல்குவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி அமைந்தால், நிலத்தடி நீா்மட்டம் குறைவதுடன், விவசாய நிலங்கள் பாழ்படும். இதனால், எரிச்சநத்தம், நடையனேரி கிராம விவசாயிகள் கடும் பாதிப்படைவா். மேலும், குவாரி அமையும் இடம் அருகே பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. சட்ட விதிகளை மீறி இந்த குவாரி அமைக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, குவாரி அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி எரிச்சநத்தம் கிராமமக்கள் மற்றும் பாஜகவினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.