விருதுநகரில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி விருதுநகரில் சிஐடியு தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
விருதுநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி விருதுநகரில் சிஐடியு தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்தி ய அரசு கைவிட வேண்டும். புதுதில்லியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராகத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதுடன், அச்சட்டங்களை ரத்த செய்ய வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளா் நலச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதில் ஜேசிடியு சங்க செயலாளா் தேனிவசந்தன் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினாா். சிஐடியு தொழிற் சங்கத்தை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com