47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாத்தூரில் வியாபாரிகள் சங்கக் கூட்டம்

சாத்தூரில் வியாபாரிகள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:09 pm

DIN

சாத்தூரில் வியாபாரிகள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் விக்ரமராஜா தலைமை வகித்தாா்.

சிறுசிறு அமைப்புகளாக உள்ள அனைத்து வியாபாரிகளையும் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பில் இணைக்கும் முயற்சியாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் நலனுக்காக பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் தமிழ்நாடு வியாபாரிகள் வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கூறியதாவது: தமிழக முதல்வரிடமும், விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும் வியாபாரிகளின் நலன் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்படும். மேலும் கரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாமல் தவித்த பட்டாசு தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.