47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜபாளையத்தில் பொதுமக்களிடம் சிக்கிய பல நாள் திருடன்: காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

ராஜபாளையத்தில் பல மாதங்களாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்த பொது மக்கள் காவல்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர். 

News image
இசக்கி.
Updated On :25 அக்டோபர் 2020, 1:30 pm

DIN

ராஜபாளையத்தில் பல மாதங்களாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்த பொது மக்கள் காவல்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர். 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 29 வார்டில் துரைசாமிபுரம் நெசவாளர் தெரு, அம்பலபுளி பஜார், முனியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக செல்போன் திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு, வீடு புகுந்து திருடுதல், பெட்ரோல் திருட்டு, ஜன்னல் ஓரம் தூங்குபவர்களின் கழுத்தில் அணிந்துள்ள சங்கிலிகளை அறுத்து செல்லுதல் போன்ற தொடர் குற்ற செயல்கள் நடைபெற்று வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்னதாக இரு சக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் துரைசாமிபுரம் நெசவாளர் பகுதியின் பல்வேறு இடங்களில், சமுதாயத்தில் இருந்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத இளைஞர் பெட்ரோல் திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து கடந்த 3 தினங்களாக தெருவில் உள்ள இளைஞர்கள் 20 பேர் இணைந்து, இரவு முழுவதும் காவலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்த போது, தொடர் திருட்டில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. அவரை பிடித்த இளைஞர்கள் அருகே இருந்த சமுதாய கூடத்தில் கட்டி வைத்தனர். விசாரித்ததில் அவர் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த இசக்கி(34) என்பதும், பல ஆண்டுகளாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதும் தெரிய வந்தது. திருடனுக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.