47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பந்தல்குடி ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் தசரா கொண்டாட்டம்

அருப்புக்கோட்டை அருகே ஸ்ரீசீரடி சாய் பாபா கோயிலில் தசரா விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்விகளுடன் திங்கள்கிழமை நண்பகல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
பந்தல்குடி ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் தசரா கொண்டாட்டம்.
Updated On :26 அக்டோபர் 2020, 7:02 am

DIN

அருப்புக்கோட்டை அருகே ஸ்ரீசீரடி சாய் பாபா கோயிலில் தசரா விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்விகளுடன் திங்கள்கிழமை நண்பகல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி அருகே ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நவராத்திரி விழா தொடக்க நாள் முதலாக கொலு அமைத்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 
இதன்படி நிறைவு நாளான தசரா நாள் திங்கள்கிழமை காலை 9.15 முதல் 10.30 வரை உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் சந்திதானத்திற்குப் பல்வேறு வித வண்ண மலர்களால் அலங்காரங்கள் அமைத்து, 1008 தீபங்கள் ஏற்றி, நண்பகல் ஆரத்தி நடைபெற்றது. 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிறுவனரும், நிர்வாகியுமான வி.சுந்தரமூர்த்தி செய்திருந்தார். 
அப்போது திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.