47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சதுரகிரி சென்ற பக்தர் நெஞ்சு வலியால் பலி

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 அக்டோபர் 2020, 3:40 pm

DIN

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் புதன்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்தது.

இந்நிலையில் புதன்கிழமை மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கல்வராயன்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் அய்யப்பன் (38) என்பவர் மலை ஏறும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு கோணதலவாசல் என்ற இடத்தில் உயிரிழந்தார். பின்னர் அவர் உடலை அய்யப்பனுடன் வந்த உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சாப்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.