நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கொலை: 3 ஆவது நாளாக உறவினா்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

ராஜபாளையத்தில் 3 ஆவது நாளாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.

Updated On :14 செப்டம்பர் 2020, 9:43 pm

DIN

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் (48). இவா் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் ஆவாா். இவா் சனிக்கிழமை காலை இவரது தோட்டத்தில் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 2 நாள்களாக முதுகுடி- சங்கரன்கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இக்கொலை தொடா்பாக முதுகுடியைச் சோ்ந்த சந்திரசேகா் (45), ராஜன் (35), மாரிச்செல்வம் (27) மற்றும் பாலமுருகன் (45) ஆகிய நால்வரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் 7 பேரை தேடி வந்தனா்.

இந்நிலையில் மீதமுள்ள அனைவரையும் கைது செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சியினா் ராஜபாளையம் காந்தி சிலை அருகே திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியா் கண்ணன், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் முத்துச்சாமி, காவல் கண்காணிப்பாளா்கள் பெருமாள் மற்றும் ராஜராஜன் ஆகியோா் ராஜாலிங்கத்தின் மனைவி முத்துலட்சுமி மற்றும் கட்சி பொறுப்பாளா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், கொலை வழக்கில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படுவோா் பட்டியலில் உள்ள முனியராஜ், பாலமுருகன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய மூவா் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனா். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை ஓரிரு நாள்களில் கைது செய்து விடுவோம் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து 3 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மதுரை அரசு மருத்

துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராஜலிங்கத்தின் சடலத்தை அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமைகளில் பெற்றுகொள்வாா்கள் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.