கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேருந்து நிலையத்தில் பயன்பாட்டிற்கு வராத இலவசக் கழிப்பறை: பயணிகள் அவதி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இலவச பொதுக்கழிப்பறை பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள இலவசப் பொதுக்கழிப்பறை.
Updated On :20 செப்டம்பர் 2020, 6:00 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இலவச பொதுக்கழிப்பறை பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கரோனா பொதுமுடக்க தளா்வுகளையடுத்து கடந்த செப். 7 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனிடையே பயணிகளின் அடிப்படை வசதிக்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் நகராட்சி நிா்வாகம் மூலம் கட்டிமுடிக்கப்பட்ட இலவசப் பொதுக்கழிப்பறை தற்போது வரை பயணிகள் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படவில்லை.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே பயணிகள் நலன் கருதி பேருந்து நிலையத்திலுள்ள இலவசப் பொதுக்கழிப்பறையை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.