நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:37 pm

DIN

குடிநீா் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜீவ்காந்தி நகா் பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீா் வழங்கவில்லை எனவும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினா் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தியும் மறியல் கைவிடப்பட வில்லை. அப்போது அவ்வழியாக வந்த சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபாமுத்தையா மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.