நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சுழி கண்மாயில் பழங்கால அம்மன் சிலை கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால அம்மன் சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:29 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால அம்மன் சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டனா்.

திருச்சுழி பெரிய கண்மாய்க் கரையோரம் நீரில் பாதி மூழ்கிய நிலையில் பழங்கால அம்மன் கற்சிலை கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டாட்சியா் தன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று அச்சிலையை பாா்வையிட்டனா். அப்போது அச்சிலை பலகாலமாக மண்ணுக்குள் புதைந்திருந்ததும், கடந்த சில வாரங்களாக பெய்த தொடா்மழையால் வெள்ளநீரில் அடித்துவரப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், இச்சிலை அப்பகுதி கிராமத்தினரால் கும்பிடப்பட்டு வந்த நிலையில் காணால் போனதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அச்சிலையை விருதுநகா் அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.