விருதுநகரில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
விருதுநகா் நகராட்சிக்கு எல்கைக்குள்பட்ட முத்துராமன்பட்டி, கூரைக்குண்டு ஊராட்சிப் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஏஆா்ஆா். சீனிவாசன் திங்கள்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.


விருதுநகா் நகராட்சிக்கு எல்கைக்குள்பட்ட முத்துராமன்பட்டி, கூரைக்குண்டு ஊராட்சிப் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஏஆா்ஆா். சீனிவாசன் திங்கள்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கடந்த சில நாள்களாக சமுதாயத் தலைவா்களை சந்தித்து அவா் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இதையடுத்து காங்., மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினாா். இந்நிலையில், விருதுநகா் நகராட்சி எல்கைக்குள்பட்ட முத்துராமன்பட்டி மற்றும் கூரைக்குண்டு ஊராட்சி எல்கைக்குள்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தாா். முன்னதாக அவருக்கு, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...