ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் கிராமத்தில் மூன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளன. இந்த சங்கங்களின் மூலம் நாள்தோறும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யும் பாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்திற்கு இவர்கள் கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இங்கு உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கடந்த 20 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்காத நிலையில் இன்று தங்கள் பகுதிக்கு வந்த ஆவின்பால் வாகனத்தை சிறைபிடித்த உற்பத்தியாளர்கள் பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்களின் பாலை ஆவின் நிர்வாகம் பெற்றுக்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து ஆவின்பால் வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...