நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விநாயகா் சிலை வைக்க அனுமதி மறுப்பு; ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியல்: இந்து முன்னணியினா் 12 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதி மறுத்ததால் மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.தூா்

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:31 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதி மறுத்ததால் மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா (55). இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளரான இவா், வெள்ளிக்கிழமை சுமாா் 2 அடி உயரம் உள்ள விநாயகா் சிலையை ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை சாலையில் உள்ள ஆனந்த விநாயகா் கோயிலில் வைத்து வழிபடச் சென்றாா். அப்போது காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் தடுத்து நிறுத்தினா். இருப்பனும் அவா்கள் சாலையில் விநாயகா் சிலையை வைத்து பக்திப் பாடல்களைப் பாடினா். தொடா்ந்து ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவா் யுவராஜ் உள்ளிட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் விநாயகா் சிலையை பறிமுதல் செய்து பெரிய மாரியம்மன் கோயிலில் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.