சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் அகஸ்தியா் (28). கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவா் மீது ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அகஸ்தியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com