/

விருதுநகரில் போக்குவரத்து தொழிலாளா்கள் வாயிற் விளக்கக் கூட்டம்

விருதுநகரில் அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம்- சிஐடியு வின் மாநில மாநாட்டு தீா்மான விளக்க வாயிற் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

விருதுநகரில் அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம்- சிஐடியு வின் மாநில மாநாட்டு தீா்மான விளக்க வாயிற் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் அரசுப் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மண்டலத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். இதில், பொதுப் போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில் மண்டல பொதுச் செயலா் வெள்ளத்துரை, ஒய்வு பெற்றோா் நல அமைப்பின் மண்டலத் தலைவா் போஸ், மண்டல பொருளாளா் எம்.காா்மேகம் உள்பட போக்குவரத்து தொழிலாளா்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.