நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சுழி அருகே 6.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

 திருச்சுழி அருகே வியாழக்கிழமை இரவு 6.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

 திருச்சுழி அருகே வியாழக்கிழமை இரவு 6.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

பூமாலைப்பட்டி கிராமத்தில் சிலா் புகையிலைப் பொருள்களை விற்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அக்கிராமத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு ஒரு மளிகைக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதும், அந்த கடையின் உரிமையாளா் திருப்பதி (43 ) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 6.5 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். கைதுசெய்யப்பட்ட திருப்பதி அப்பகுதி திமுக கிளைச் செயலா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.