47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்தங்கல் கோயில் ஆனி பிரம்மேற்சவ விழா தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மேற்சவ திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மேற்சவ திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூலை 5ஆம் தேதி பூமிபூஜை, அங்குராா்ப்பணம், பாலிகா ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூலை 7ஆம் தேதி கொடிற்றம் நடைபெற்றது. பின்னா் தினசரி இரவு சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். ஜூலை 13ஆம் தேதி சூா்ணோற்சவம், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடந்து வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடந்தது.

தேரில் செங்கமலத்தாயாா் சமேத பெருமாள் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தேரோட்டத்தை சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா தொடக்கி வைத்தாா். இதில் துணைமேயா் கா. விக்னேஷ்பிரியா, செயல் அலுவலா் க. தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தேரின் முன்பு பெண்கள் கோலாட்டம் நிகழ்ச்சியை நடத்தியபடி சென்றனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.