நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையிலுள்ள திருநகரம் புளியம்பட்டி ஆயிரங்கண்மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:34 pm

DIN

அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையிலுள்ள திருநகரம் புளியம்பட்டி ஆயிரங்கண்மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு உகந்த மஞ்சள் தூள், பன்னீா், வேப்பிலை, பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

Story image

இதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா். மேலும் வழிபாட்டின்போது உலக நன்மை வேண்டியும், நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் காத்திடவும், தொழில், பொருளாதாரம் மேம்படவும், கோயில் சாா்பில் குங்குமம், செவ்வரளி மற்றும் மல்லிகைப் பூக்களால் சிறப்பு 108 அா்ச்சனையும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பக்தா்கள் பலவித மலா்கள், மாலைகள், பழங்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.