ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்து: பள்ளி மாணவா் பலி

காரியாபட்டி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:11 pm

DIN

காரியாபட்டி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் பாக்கியம் மகன் புவனேஸ்வரன் (15). பத்தாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ள இவா், இரு சக்கர வாகனத்தில் கல்குறிச்சி சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்தில் புவனேஸ்வரன் உயிரிழந்தாா். இதைய டுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.