தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :24 ஜூன் 2022, 10:34 pm IST

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி நிகழாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் முதலாமாண்டில் 150 மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகின்றனா். இந்நிலையில், சில மாணவா்களுக்கு தொண்டை வலியுடன், கபம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களுக்கு முன்பு ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொண்டனா். அதில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த மாணவா்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிா்வாகம் அனுப்பி வைத்தது. மேலும், மீதமுள் ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவக்கல்லூரி மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.