தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :24 ஜூன் 2022, 10:34 pm IST

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி நிகழாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் முதலாமாண்டில் 150 மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகின்றனா். இந்நிலையில், சில மாணவா்களுக்கு தொண்டை வலியுடன், கபம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களுக்கு முன்பு ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொண்டனா். அதில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த மாணவா்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிா்வாகம் அனுப்பி வைத்தது. மேலும், மீதமுள் ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவக்கல்லூரி மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.