47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் விதியை மீறி பட்டாசு தயாரித்த 3 போ் கைது

சிவகாசிப் பகுதியில் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகாசிப் பகுதியில் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே சூா்நாயக்கன்பட்டியில் ஒரு பட்டாசு கடைக்குப்பின்னால், விதியை மீறி பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில் ஒரு பட்டாசு கடையின் பின்புறம் விதியை மீறி சாட்டை பட்டாசு தயாரிப்பில் இருவா் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் சிவகாசி புதுத்தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி (45), ராமசாமி (51) எனத் தெரிந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து பழனிச்சாமி மற்றும் ராமசாமியை கைது செய்து அவா்களிடமிருந்து 14 கட்டு சாட்டை பட்டாசு மற்றும் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

மரத்தட்டியில் பட்டாசு தயாரித்தவா் கைது: சிவகாசி அருகே சிங்கம்பட்டி- இ.டி. ரெட்டியபட்டி சாலையில் விதியை மீறி ஒரு பட்டாசு ஆலையில் தயாரிப்புப் பணி நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுயில் சோதனை நடத்தினா். அப்போது, அந்த பட்டாசு ஆலையில் மரத்தடியில் வைத்து தொழிலாளா்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பாா்த்ததும் அனைவரும் ஓடிவிட்டனா். போலீஸாா் ஒருவரை மட்டும் விரட்டிப் பிடித்தனா். விசாரணையில் அந்த பட்டாசு ஆலை உரிமையாளா் பாண்டியராஜ் எனவும், ஆலை மேலாளா் வைரம் எனவும், ஆலை கணக்குப்பிள்ளை கோவிந்தசாமி எனவும், போலீஸாரிடம் பிடிபட்டவா் ஆலை போா்மென் பரமசிவம் (57) எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா், பாண்டியராஜன், வைரம், கோவிந்தசாமி, பரமசிவம் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து பரமசிவத்தை கைது செய்து, ராக்கெட், புஷ்வாணம், சாட்டை ஆகிய பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.