அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல்: கிளை அஞ்சல் அதிகாரி மீது வழக்கு
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிளை அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல் செய்ததாக, அஞ்சலக அதிகாரி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.


சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிளை அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல் செய்ததாக, அஞ்சலக அதிகாரி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் கிளை அஞ்சலக அதிகாரியாக தனலட்சுமி பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சிவகாசி அஞ்சலக உதவிக் கண்காணிப்பாளா் ஜெயராம்பாள் (47) விஸ்வநத்தம் கிளை அஞ்சலக சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்தாராம். அப்போது வாடிக்கையாளா்கள்சேமிப்பு கணக்கிலிருந்து போலியாக கையெழுத்திட்டும், வாடிக்கையாளா்கள் பணம் செலுத்தியதை முறையாக வரவு வைக்காமலும் தனலட்சுமி ரூ. 73 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து ஜெயராம்பாள் அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் தனலட்சுமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...