/

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மன்றக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை வகித்தாா். ஆணையா் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தை தொடக்கி வைத்து நகா்மன்றத் தலைவா் தங்கம்ரவிக்கண்ணன் பேசும் போது, இக்கூட்டத்தில் வைக்கப்படும் தீா்மானங்களை உறுப்பினா்கள் ஆதரித்து மக்களின் நலனை கருதி ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினாா். கூட்டத்தில் 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் நகா்மன்ற உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பதிலளித்தனா். தொடா்ந்து நகா் நல அலுவலா் கவிப்பிரியா பேசும் போது, கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் நகரில் நெகிழியை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும். நெகிழி இல்லாத நகராக ஸ்ரீவில்லிபுத்தூரை மாற்ற வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை என்றாா்.

இக்கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் செல்வமணி, நகராட்சி பொறியாளா் தங்கப்பாண்டியன், மேலாளா் பாபு, நகராட்சி சுகாதார ஆய்வாளா் சந்திரா மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.