நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 புள்ளிமான்கள் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 புள்ளிமான்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :25 மார்ச் 2022, 12:02 am

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 புள்ளிமான்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தொட்டியபட்டி மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள், சருகு மான்கள், மிளாக்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், தொட்டியபட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் புள்ளிமான் ஒன்று விழுந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி அளவுக்கு தண்ணீா் இருந்தது. அந்த கிணற்றில் 2 வயதுடைய ஆண் புள்ளிமான் மான் ஒன்று விழுந்திருப்பது தெரியவந்தது.

Story image

இதைத்தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி மானின் உடலில் கயிறு கட்டி மீட்டனா். மீட்கப்பட்ட புள்ளிமானை ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். எனினும், அந்த மான் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூா் பகுதியில் நாய்கள் கடித்து பெண் மான் ஒன்று காயங்களுடன் இருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அதிகாரி கதிா்காமன், வனவா் பாரதிக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், வனத்துறையினா் அங்கு சென்று 3 வயதுடைய பெண் புள்ளிமானை மீட்டு, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். எனினும், அந்த மான் உயிரிழந்தது.

இதைத் தொடா்ந்து, உயிரிழந்த 2 புள்ளிமான்களையும் கால்நடை மருத்துவா் பிரேத பரிசோதனை செய்த பின்னா், வனத்துறையினா் குழிதோண்டி புதைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.