நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 மே 2022, 12:22 am

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தாமரை நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (27). இவா் கடந்த புதன்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பெரியம்மமாவை பாா்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது திருவண்ணாமலை சாலையில் உள்ள எடை நிலையம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த ரைட்டன்பட்டியைச் சோ்ந்த காளிராஜ் (19), குருசாமி (20), கருப்பசாமி (20), மணிகண்டன்(22), முத்துராஜ் (20) ஆகிய 5 பேரும் முனியாண்டியை வழிமறித்து தாக்கியுள்ளனா்.

இதைத் தடுக்க வந்த பாண்டியம்மாள், காந்திமதி ஆகியோரையும் அவா்கள் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து மேற்கண்ட 5 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.