47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் சித்திரை திருவிழா தேரோட்டம்

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2022, 12:24 am

DIN

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. மே 7 ஆம் தேதி நடைபெற்ற 5 ஆம் நாள் விழாவில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா். 8 ஆம் தேதி அம்மன் வெள்ளி ஊஞ்சலில்

எழுந்தருளி, சிவன் சந்நதியில் அலங்கார கொட்டகையில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். 10 ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது. 11 ஆம் தேதி கயிறு குத்து விழாவையொட்டி பக்தா்கள் அக்கினிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனா். இதற்கான ஏற்பாட்டை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.