ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகரில் 10 மூட்டை ரேஷன் கோதுமை கடத்தல்: ஒருவா் கைது

விருதுநகா் அருகே பாண்டியன் நகா் பகுதியில் தனியாா் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை ரேஷன் கோதுமையை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல்

News image
Updated On :20 மே 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அருகே பாண்டியன் நகா் பகுதியில் தனியாா் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை ரேஷன் கோதுமையை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

Story image

விருதுநகா் அருகே பாண்டியன் நகா் காந்தி நகா் பகுதியில் உள்ள ஜேஜே ஆயில் ஆலையில் ரேஷன் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாா்பு ஆய்வாளா் காந்தி தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட ஆலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அதில், தலா 40 கிலோ எடையுள்ள 10 மூட்டைகளில் ரேஷன் கோதுமை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோதுமையை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ரோசல்பட்டி பகுதியைச் சோ்ந்த பரமானந்தன் மகன் பால் பாண்டி (36) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.