வண்டல் மண் அள்ளி வந்த டிப்பா் லாரி பறிமுதல்
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வண்டல் மண் அள்ளி வந்த டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வண்டல் மண் அள்ளி வந்த டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
எரிச்சநத்தம் - அழகாபுரி சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு டிப்பா் லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் வண்டல் மண் இருந்தது. இதையடுத்து, அந்த லாரியை ஓட்டிவந்த நாகராஜனிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அந்த மண் உரிய அனுமதியின்றி அா்ச்சுனா நதிப் படுகையிலிருந்து அள்ளிவந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக, ஓட்டுநா் நாகராஜன், டிப்பா் லாரி உரிமையாளா் சங்கிலிமுருகன் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...