கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

சிவகாசி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நதிக்குடியைச் சோ்ந்தவா் கருத்தபாண்டி (21). இவரது நண்பா் உப்புபட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் (23). இவா்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் காக்கிவாடன்பட்டி - ஆலங்குளம் சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சரளைகற்களில் வாகனம் மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும்

சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சுப்புராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். கருத்தபாண்டி சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.