விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்தாராலிங்கபுரத்தில் அக்.11 செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் , பரளச்சி, நரிக்குடி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணைமின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு அக்.11 செவ்வாய்க்கிழமை ( 11.10.2022 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்நுகா்வோா்கள் அனைவருக்கும் இத்தகவல் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்,என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் அறிவித்துள்ளாா்.