புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளி நியமிக்க கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாளையம்பட்டி, கோவிலாங்குளம், ராமானுஜபுரம், தொட்டியான்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்கு 30-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும் உள்ளன. ஆனால் இரவு நேரத்தில் 2 செவிலியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இங்கு இரவு நேரக் காவலாளி இல்லாததால், கடந்த 2 ஆம் தேதி இரவு இளைஞா் ஒருவா் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியரிடம் தகராறு செய்துள்ளாா். எனவே இந்த சுகாதார நிலையத்துக்கு இரவு நேர காவலாளி, மருத்துவ அலுவலரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.