நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவிலி. ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:24 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு உராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி கு.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 29 கிராம ஊராட்சிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பெருமளவு மரக்கன்று திட்டத்திற்கு ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார நாற்றாங்கால் பண்ணையில் இருந்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலங்காப்பேரி ஊராட்சி மன்ற தலைவா் சங்கிலிராஜ், ஆணையாளா் சிவக்குமாா் ,துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமமாலினி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.