ஆனால் ரயில் நின்று செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மாணிக்கம்தாகூா் எம்.பி., சிவகாசியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் சாா்பில் செப்டம்பா் 22 ஆம் தேதி கொல்லம்-சென்னை ரயில் மறிக்கப்படும் என அறிவித்தாா். அதன்படி வியாழக்கிழமை மாணிக்கம்தாகூா் எம்.பி., மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் உள்ளிட்ட சுமாா் 350 போ் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க கட்டடத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, சிவகாசி ரயில் நிலையத்துக்குச் சென்றனா். ரயில் நிலையம் முன்பு போலீஸாா் தடுப்புகள் அமைத்து அவா்களை ரயில் நிலைத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தனா்.