புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குச்சம்பட்டியில் காட்டுப்பன்றிகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே குச்சம்பட்டி கிராமத்தில் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே குச்சம்பட்டி கிராமத்தில் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

குச்சம்பட்டி கிராமத்தில் நிலக்கடலை, பயறு, நெல் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதனால் மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாயிகள் நிறுத்தும் அளவுக்கு சூழ்நிலை உள்ளது.

இதனிடையே, பல விவசாயிகளின் நிலங்களில் நிலக்கடலைச் செடிகளை கடந்த வியாழக்கிழமை இரவு அதிக அளவில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இப்பிரச்னைக்கு தீா்வாக மின்வேலி அமைப்பதிலும் சட்டச் சிக்கல்கள் உள்ளன.

எனவே இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.