சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மெக்கானிக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: இளைஞா் கைது

சிவகாசியில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக்கிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

சிவகாசியில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக்கிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் ரவிச்சந்திரன்(18). மெக்கானிக்கான இவா், இங்குள்ள நேரு குடியிருப்புப் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஒருவா் வழிமறித்து கத்தியைக் காட்டிமிரட்டி ரவிச்சந்திரன் பையில் வைத்திருந்த ரூ. 400-யை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாா்.

உடனே ரவிச்சந்திரன், அக்கம் பக்கம் உள்ளவா்களின் உதவியோடு, அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில், அவா் சிவகாசி மகாத்மாகாந்தி நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் சாமுவேல் (21) எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாமுவேலைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.