ராஜபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
நக்கனேரி குடியிருப்பு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி (41). இவரது மகள் திவ்யா (18). இவா் மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் சரிவர படிக்காததால் இவரது தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.