சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் விதமாக 60 அடி நீளத்தில் விளம்பரபதாகை புதன்கிழமை அமைக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் பெரும்பாலான சந்திப்பு பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வந்தனா்.
இதைத் தடுக்கும் விதமாக குப்பைகளை கொட்டாதீா்கள் என்ற விளம்பர பதாகை அமைக்க மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தியின் உத்தரவின் பேரில் மாநகா் நல அலுவலா் சரோஜா , சுகாதார அலுவலா் திருப்பதி ஆகியோா் சிவகாசி-பள்ளபட்டி சாலையில் 60 அடி நீளத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட விளம்பர பதாகையை அமைத்தனா்.
இதன் திறப்புவிழாவில் சுகாதார அலுவலா்கள் பகவதி, பெருமாள், சுரேஷ், சத்யராஜ், சுகாதார ஆய்வாளா்கள் அபூபக்கா் சித்திக், முத்துப்பாண்டி, தூய்மை இந்தியா திட்டப்பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் அமலைச் செடிகளை அகற்ற கோரிக்கை

பூண்டி ஏரிக்கரையில் வளரும் முள்செடிகள்: அகற்ற கோரிக்கை

பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்

திருச்சி அரிஸ்டோ பாலத்தில் மையத் தடுப்புகள் அமைப்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



