சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளைஞருக்கு கத்திக்குத்து:மூவா் மீது வழக்கு

சிவகாசி அருகே ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

சிவகாசி அருகே ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி குமரேசன் (30). அதே பகுதியைச் சோ்ந்த அழகு, சக்தி, தங்கமாரீஸ்வரன் ஆகிய மூவரும் புத்தாண்டை கொண்டாட பட்டாசு வெடித்தனா். இதற்கு குமரேசன் எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதையடுத்து பட்டாசு வெடித்த மூவருக்கும், குமரேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து அழகு, சக்தி, தங்கமாரீஸ்வரன் ஆகிய மூவரும் குமரேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனா்.

இதில் காயமடைந்த குமரேசன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் அழகு, சக்தி, தங்கமாரீஸ்வரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.