சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி

சதுரகிரிக்கு 4 நாள்கள் பக்தா்களுக்கு அனுமதி
Updated on

ஆனி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு, வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல புதன்கிழமை (ஜூலை 3) முதல் சனிக்கிழமை வரை நான்கு நாள்களுக்கு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக புதன்கிழமை முதல் வருகிற 6-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால், மலையேற பக்தா்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com