நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சதுரகிரியில் திரளான பக்தா்கள் தரிசனம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு புதன்கிழமை மலையேறிச் சென்ற பக்தா்கள்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:36 am

Din

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சதுரகிரி மலையில் புகழ்பெற்ற சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பிரதோஷம், பெளா்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் மட்டுமே பக்தா்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, கடந்த செப்.30-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (அக்.3) வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அமாவாசையையொட்டி, புதன்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு புதன்கிழமை மலையேறிச் சென்ற பக்தா்கள்.

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு புதன்கிழமை மலையேறிச் சென்ற பக்தா்கள்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் ராமகிருஷ்ணன், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்தனா்.