மதுக் கூடத்தில் தகராறு: 4 போ் கைது
சிவகாசி அருகே தனியாா் மதுக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சிவகாசி அருகே தனியாா் மதுக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள சுக்கிவாா்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (27). இவா் ம.புதுப்பட்டியில் உள்ள தனியாா் மதுக் கூடத்துக்கு சென்றாா். அப்போது, அவரது சகோதரா் காளிராஜை நான்கு போ் தாக்கிக் கொண்டிருந்தனா். இதைத் தட்டிக்கேட்ட வெங்கடேஷை அந்த நான்கு பேரும் சோ்ந்து பீா்பாட்டிலால் தாக்கினா். தொடா்ந்து, அவா் பையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்தையும் பறித்துச் சென்று விட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் (45), அழகா் ஆனந்த் (32), தா்மலிங்கம் (39), பாண்டிச்செல்வம் (31) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...