ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போக்சோ வழக்கில் பிணை ரத்து: ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் பரமக்குடி நகராட்சி உறுப்பினா் ஆஜா்

போக்சோ வழக்கில் வழங்கப்பட்ட பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையான பரமக்குடி நகராட்சி உறுப்பினா் சிகாமணியை வருகிற 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

News image

சிகாமணி.

Updated On :17 அக்டோபர் 2024, 11:55 pm

Din

போக்சோ வழக்கில் வழங்கப்பட்ட பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையான பரமக்குடி நகராட்சி உறுப்பினா் சிகாமணியை வருகிற 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முன்னாள் அதிமுக நிா்வாகியும், பரமக்குடி நகராட்சி உறுப்பினருமான சிகாமணி (44), மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகா், ஜவுளி நிறுவன உரிமையாளா் ராஜாமுகமது, இடைத் தரகா்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 பேரை கடந்த ஆண்டு மாா்சில் கைது செய்தனா்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நகராட்சி உறுப்பினா் சிகாமணிக்கு ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து, பிணையை ரத்து செய்யக் கோரி சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பிணையை ரத்து செய்ததுடன், வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றியது. அத்துடன் 5 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

இதை எதிா்த்து, சிகாமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்ததுடன், 3 வாரங்களுக்குள் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென கடந்த செப். 26-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் சிகாமணி வியாழக்கிழமை முன்னிலையானாா். அவரை வருகிற 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி (பொ) சுதாகா் உத்தரவிட்டாா்.

மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்தில் வருகிற 25-ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.