ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வன விலங்குகளால் பயிா்கள் சேதம்: இழப்பீடு வழங்க பரிந்துரை

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் இழப்பீடு வழங்க புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:42 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் இழப்பீடு வழங்க புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரமான செண்பகத்தோப்பு, வாழைக்குளம், சிங்கம்மாள்புரம், பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின.

இந்த நிலையில், வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணிப்பித்தால் இழப்பீடு வழங்கப்படும் என புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவராஜ் அறிவித்தாா்.

இதன்படி, வன விலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு கோரி 10 விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரக அலுவலகத்தில் விண்ணப்பித்தனா். அதில் வருவாய்த் துறை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த 7 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு புலிகள் காப்பகத் துணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், 3 விவசாயிகளுக்கு வருவாய்த் துறை சான்று வழங்கிய பின் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என வனச் சரகா் செல்லமணி தெரிவித்தாா்.