ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலையில் சென்ற போது தீப்பற்றி எரிந்தது காா்

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது.

News image

சிவகாசி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்.

Updated On :24 அக்டோபர் 2024, 12:58 am

Din

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த தீபன் தனது காரில் ஸ்ரீவில்லிபுத்தூா் சென்றாா். அவா் செங்கமலநாட்சியாா்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்புறத்தில் தீப்பிடித்தது. இதையடுத்து, தீபன் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாா்.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் போராடித் தீயை அணைத்தனா். எனினும், காரின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.