சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

சிவகாசியில் 12 ஆண்டுகளுப் பின் மறுசீரமைக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

News image
சிவகாசி மாநகராட்சி சுகாதார வளாகம் முன் மரகன்று நட்டுவைத்த மேயா்.இ.சங்கீதா.
Updated On :11 செப்டம்பர் 2024, 11:33 pm

Din

சிவகாசியில் 12 ஆண்டுகளுப் பின் மறுசீரமைக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி 17-ஆவது வாா்டு, நாடாா் நந்தவனத் தெருப் பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்த சுகாதார வளாகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என இந்தப் பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் மறு சீரமைக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா திறந்து வைத்தாா். மேலும், சுகாதார வளாகத்தின் முன் அவா் மரகன்றுகளை நட்டுவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் மா.நிலானி, சுகாதார அலுவலா்கள் சுரேஷ், சத்யராஜ், சுகாதார ஆய்வாளா் முத்துப்பாண்டி, தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

இது போன்று மாநகராட்சிப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகள் மறு சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.