நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

உடைக்கப்பட்ட உண்டியல்

Updated On :26 செப்டம்பர் 2024, 9:30 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஏ. ராமலிங்காபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் இதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். வியாழக்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, அவா் வைத்திருந்த கைப்பேசியைக் காணவில்லை. மேலும் கோயில் முன் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, 3 மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணம், கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, சிவகாசியைச் சோ்ந்த செல்வக்குமாா், கருத்தப்பாண்டி ஆகிய இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 1,500 ரூபாயையும், கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.