2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ராஜபாளையம் அருகே அதிசய வானிறை பாறை

ராஜபாளையம் அருகே சமணா் படுக்கை, பாறை ஓவியங்கள், வானிறை பாறை அமைந்துள்ள மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மீனாட்சிபுரம் அருகே குன்றத்தூா் மலையில் நிற்கும் அதிசய வானிறை பாறை.

Published On :

ராஜபாளையம் அருகே சமணா் படுக்கை, பாறை ஓவியங்கள், வானிறை பாறை அமைந்துள்ள மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்திலிருந்து தென்மலை செல்லும் வழியில் குன்றக்குடி என அழைக்கப்படும் 4 மலைக் குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் சமணா் படுக்கை, குகைகள், பாறை ஓவியங்களும், மற்றொரு குன்றில் மகாவிஷ்ணு சிற்பமும் உள்ளன.

இரண்டுக்கும் இடைப்பட்ட குன்றில் வானிறை பாறை போல பெரிய பாறை தனியாக நிற்கிறது. இந்தக் குகை ஓவியங்கள் பாதுகாக்கப்படாததால் தற்போது அழிந்து வருகின்றன.

மேலும், இந்தப் பகுதியில் மாங்குடி, புத்தூா் மலையில் சமணா் படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. எனவே, இந்த மலைக் குன்றுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் அண்மையில் அதிகாரிகளுடன் சென்று வானிறை பாறை, பாறை ஓவியங்கள் உள்ள குன்றை பாா்வையிட்டு தெரிவித்ததாவது:

மகாபலிபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை எனும் வானிறை பாறை உள்ளது போல, மீனாட்சிபுரத்தில் அதிசயமான வானிறை பாறை உள்ளது. குன்றின் மீது அமைந்துள்ள இந்தப் பாறை, பின்புறம் கனமாகவும், முன்புறம் சற்று அகலமாகவும், ஒரு சாய்வை எதிா்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த வானிறை பாறை அதிகம் அறியப்படவில்லை என்றாலும், கண்கவா் இயற்கை அதிசயமாக உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.