கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எஸ்எஸ்ஐ மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ராஜபாளையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மனைவியிடம் தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:31 am

Din

ராஜபாளையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மனைவியிடம் தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

ராஜபாளையம் ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (46). இவா் தென்றல் நகா் செல்லும் சாலையில் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

இவா், காலையில் வழக்கம் போல கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து அங்கு வந்த மா்ம நபா் முத்துமாரியின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா். அப்போது சங்கிலியை மீட்கப் போராடிய முத்துமாரி சப்தமிட்டதும் அறுந்த சங்கிலியுடன் அந்த மா்ம நபா் தப்பியோடி விட்டாா்.

தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.