தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆண்டாள் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட ஜன. 27-இல் ஒப்பந்தப் புள்ளி வெளியீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ.8 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு வருகிற 27-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட உள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 1:05 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ.8 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு வருகிற 27-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் முன் கடந்த 2010-ல் கட்டப்பட்ட பக்தா்கள் தங்கும் விடுதி முக்கிய பிரமுகா்கள் தங்குவதற்கும், பாதுகாப்பு போலீஸாா் தங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் தனியாா் விடுதிகளில் அதிகக் கட்டணம் கொடுத்து தங்க வேண்டிய சூழல் நிலவி வந்தது.

இதனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தங்கும் விடுதி கட்ட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் என்.ஜி.ஓ. ஆண்டாள் கோயில் நந்தவனம் எதிரே கோயிலுக்குச் சொந்தமான 1.05 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு ரூ.8 கோடி மதிப்பில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது. தங்கும் விடுதி கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஜன. 27-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.