மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியைப் பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் உதயன்மிஸ்ரா, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:25 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,22,367 வாக்காளா்கள் உள்ளனா். இந்தத் தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 369 கட்டுப்பாட்டுக் கருவிகள், 400 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

தோ்தல் பொதுப்பாா்வையாளா் உதயன்மிஷ்ரா முன்னிலையில், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் தோ்தலில் போட்டியிடும் 14 வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு சரிபாா்க்கப்பட்டது. பின்னா், வாக்குச்சாவடி வரிசை எண் வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ், வட்டாட்சியா் பாலமுருகன் ஆகியோா் இருந்தனா்.